Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஓட்டை வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மளிகை கடையில் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ம் தேதி சத்தியசீலன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சத்தியசீலன் மறுநாள் காலையில் கடையைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் பகுதியில் உள்ள ஓட்டை வழியாக மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பிஸ்கட் பாக்கெட்டுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சத்தியசீலன் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |