வாய்க்காலில் வாலிபர் உடல் மிதந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் மெய்பழந்தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவரது உடல் திருமேனி ஏரி வாய்க்காலில் மிதந்துள்ளது. இதனை கண்ட ஊர் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரான ராஜ்மோகன் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராஜ்மோகன் மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.