Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வேலை வாங்கி தருவதாக 10 மாதங்களில் 2,210 பேரிடம் மோசடி… எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!!

தமிழகத்தில் இணையதளங்கள் சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த புகார்கள் 748 வந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு 13,077 போவார்கள் வந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1648 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணினி, கைபேசி மூலம் நடைபெற சைபர் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50% அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. மேலும் டெல்லி, பெங்களூ,ர் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஆண்டுக்கு 25% இருந்து 20% வரை சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இணையதளங்களில் வேலை வாங்கித் தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து ஏமாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த மோசடியில் மாநிலம் உள்ளது 1,150 பேருக்கு பணத்தை இழந்து உள்ளனர்‌.

ஆனால் நடப்பாண்டில் 10 மாதங்களில் 2,120 பேர் ஏமாந்திருப்பதாக சைபர் குற்ற பிரிவில் புகார் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலான புகார்களுக்கு வழக்கு பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 600 புகார்கள் விசாரணை நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேலைவாய்ப்பு இணையதளங்களின் பதிவு செய்துள்ள இளைஞர்கள் தங்கள் கைப்பேசிக்கு வரும் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், ‌மின்னஞ்சல் ஆகியவற்றை கவனமுடன் கையால வேண்டும். முக்கியமாக அந்த தகவல்கள் தாங்கள் பதிவு செய்துள்ள குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வந்துள்ளதா அல்லது அதன் பேரில் போலி உள்ள நிறுவனங்கள் மூலம் மோசடி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்த அணுக வேண்டும் தெரிவித்துள்ளனர். இத்தகைய மோசடியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானோர் சேர்ந்துவர்களாக இருப்பதால் அவர்களை கைது செய்து, பணத்தை மீட்பது சவாலான காரியமாக உள்ளது. எனவே பொதுமக்கள் இணையதளங்களில் வேலைக்கு பதிவு செய்யும்போது சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மூலம் வரும் தகவல்களை மிகுந்த கவனமுடன் இருந்தால் மட்டுமே மோசடி வலையில் இருந்து சிக்காமல் தப்பிக்க முடியும் என்று சைபர் குற்ற பிரிவை சேர்ந்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |