மகாலட்சுமியை வழிபட உகந்த நாள் எதுவென்று தெரியுமா….? வாருங்கள் பார்க்கலாம். ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சப்தமி வரை உள்ள நாட்கள் (4 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை) மகாலட்சுமி வழிபாட்டுக்கு உரிய நாட்களாகும். இந்த நாட்களில் மகாலட்சுமியை ஸ்ரீஸூக்தம் கனகதாரா ஸ்தவம் போன்ற மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.
மேலும் மல்லிகை, முல்லை மற்றும் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் போன்றவைகளால் மகாலட்சுமியை அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜித்து பிரார்த்திப்பதால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள், ஏழ்மை விலகும். அதோடு செல்வங்கள் அனைத்தும் நிரந்தரமாக நம் வீட்டில் குடியேறும்.