Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மகுடேஸ்வரர் கோவில்” காணிக்கை எண்ணும் பணி…. மொத்தம் இவ்வளவு ரூபாய்…?

மகுடேஸ்வரர் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் 13 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் மொத்தம் 20 உண்டியல்கள் இருக்கிறது. இந்நிலையில் காணிக்கை எண்ணுவதற்காக இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரமேஷ் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.

அப்போது உண்டியல்களில் மொத்தம் 13 லட்சத்து 21 ஆயிரத்து 10 ரூபாய், 65 கிராம் தங்கம் மற்றும் 340 கிராம் வெள்ளி பொருட்கள் போன்றவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு காணிக்கை எண்ணும் பணியில் எஸ்.எஸ்.வி. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனிடையில் காணிக்கை எண்ணும் பணியை ஆய்வாளர் தேன்மொழி மேற்பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ் செய்து இருந்தார்.

Categories

Tech |