தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 28 நாட்கள் தனிமைப்படுத்தல், கண்காணிப்பு முடிந்து 19,060 பேர் சென்றுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இன்று ஒரே நாளில் சென்னையில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 113 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவதாக கோவையில் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :
மாவட்டம்
|
சிகிச்சை பெற்று வருபவர்
|
சென்னை | 113 |
கோவை | 63 |
திண்டுக்கல் | 45 |
திருநெல்வேலி | 38 |
திருச்சிராப்பள்ளி | 31 |
நாமக்கல் | 28 |
ஈரோடு | 27 |
தேனி | 24 |
ராணிப்பேட்டை | 24 |
கரூர் | 22 |
விழுப்புரம் | 20 |
செங்கல்பட்டு | 20 |
மதுரை | 19 |
கடலூர் | 13 |
திருவாரூர் | 12 |
திருவள்ளூர் | 12 |
சேலம் | 12 |
விருதுநகர் | 11 |
திருப்பத்தூர் | 11 |
தூத்துக்குடி | 11 |
நாகப்பட்டினம் | 11 |
தஞ்சாவூர் | 8 |
திருப்பூர் | 7 |
காஞ்சிபுரம் | 7 |
வேலூர் | 6 |
கன்னியாகுமரி | 6 |
திருவண்ணாமலை | 5 |
சிவகங்கை | 5 |
நீலகிரி | 4 |
ராமநாதபுரம் | 2 |
கள்ளக்குறிச்சி | 2 |
பெரம்பலூர் | 1 |
அரியலூர் | 1 |