Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி பகுதியில் விஷ்ணுபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணுபிரியாவும், அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் பாண்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திரு ஆவினன்குடி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு பிரகாஷ் பாண்டியின் பெற்றோருடன் மணமக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |