லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஜெய்லானி காலனியில் வசிக்கும் ஜெயராம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயராமை கைது செய்ததோடு அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.