ஒரே இரவில் ஒருவர் 55 மில்லியன் டாலர் சொந்தக்காரர் ஆகி மிக பெரிய பணக்காரர் ஆகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது
கனடாவின் ரொரன்ரோ பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற லாட்டரி குலுக்கல் போட்டியில் yellowknife நகரில் வசிக்கும் ஒருவருக்கு 55 மில்லியன் டாலர் பரிசுத் தொகை விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெஸ்டன் கனடா லாட்டரி கார்ப்பரேஷன் வெளியிட்டது.
ஆனால் இதுவரை பரிசு தொகை விழுந்த நபர் இதுகுறித்து கோரவில்லை. அதேபோன்று லாட்டரி குலுக்கலில் ஆறுதல் பரிசாக பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த நபருக்கு ஒரு மில்லியன் டாலர் விழுந்துள்ளது. பரிசுப் பணத்தை பெறப்போகும் நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை ஆனால் அவர்களது விபரம் விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.