லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாபண்ணை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேத்தாம்பட்டியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து லட்சுமி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக லட்சுமி மீது மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.