Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி எழில்மாறன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் எழில்மாறனை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன் பின் எழில்மாறன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி எழில்மாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எழில்மாறனின் மனைவியான கல்பனா என்பவர் ரத்தினகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எழில்மாறன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |