Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற பால் வியாபாரி…. லாரியால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலைசேரி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணி பால் கொண்டு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்தோணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |