கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சரக்கு வேன் மற்றும் டேங்கர் லாரி போன்ற வாகனங்களில் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பிரவீன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வேன் மற்றும் டேங்கர் லாரி மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் டேங்கர் லாரியும் சாலையில் கவிழ்ந்து, சரக்கு வேன் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த வாகனங்களின் ஓட்டுநர்களான சிவா, விமல் மற்றும் பிரவீன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரக்கு வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரி உள்ளிட்ட 3 வாகனங்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.