இருசக்கர வாகனத்தில் மீது லாரி மோதிய விபத்தில் சமையல்காரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் சமையல்காரராக வேலை செய்யும் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலையின் விஷயமாக இருகையூர் கிராமத்திற்கு சென்று வீடு திரும்பிய போது தா.பழூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் ஏற்றி வந்த லோடு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் தா.பழூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோதியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.