Categories
உலக செய்திகள்

சுமார் 50 போலீசார் என்னை மிரட்டுகிறார்கள்…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய லண்டன் போலீசார்….!!

லண்டனில் சாரா எவரார்ட் விழிப்புணர்வு கூட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் அதிகாரிகள் தன்னை ஆப் மூலம் விரட்டுவதாக கூறி உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் கடந்த மார்ச் மாதம் சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண் வானே கோஸின்ஸ் என்ற காவல்துறை அதிகாரியால் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைதுசெய்யப்பட்டு பின்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த போலீஸ் அதிகாரி சாராவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை அருகில் உள்ள இடத்தில் புதைத்தார். இச்சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி சாராவுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சாரா காணாமல்போன இடத்திற்கு அருகிலுள்ள கிளாபம் காமன் பூங்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 4 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அதில் பாஸ்டி ஸ்டீவன்சன்  என்பவரும் ஒருவராவார். இருபத்தி எட்டு வயதாகும் இந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு கீழே தள்ளப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய காவல்துறையினர் பெண்கள் மீது வன்முறை செய்வதாக தொடர்ந்து பரவலான விவாதம் எழும்பியது. இந்நிலையில் பாஸ்டி ஸ்டீவன்சன் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார். அது காவல்துறையினரை மேலும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

 

இதுகுறித்து பாஸ்டி கூறுகையில், அவர் கைது செய்யப்பட்ட பிறகு சுமார் 50க்கும் மேற்பட்ட மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அவரை ஆப் மூலம் தொடர்பு கொண்டு பயமுறுத்துவதாக கூறியுள்ளார். இந்த ஆப்பில் அவருடைய ப்ரொஃபைலை லைக் செய்தவர்களின் விவரங்களை அவரால் பார்க்க முடியும் அப்படி பார்க்கும் பொழுது அவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் சீருடையில் இருப்பதாகவும், தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் போலீசார் ‘நாங்கள் உன்னை பார்த்து கொண்டேதான் இருக்கிறோம்’. என்று சொல்லாமல் மிரட்டுவது போல் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் தான் ஒரு பெண் என்பதை குறிப்பிட்டு கொள்வதாகவும் அவருக்கு வெளியே செல்லவே பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில் “இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால் பாஸ்டியை கட்டாயம் தொடர்பு கொள்வோம்”. என்று கூறியுள்ளார்.

Categories

Tech |