Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் நஷ்டமாகிருச்சு… உணவாக உண்ணும் விலங்குகள்… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

புதுக்கோட்டை  மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள் விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் மாங்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். அங்கு உற்பத்தி செய்த வாழைத்தார்கள் வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் அப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு உணவாகி வருகின்றது. இதனால் மனவேதனையடைந்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |