Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

‘பணம் வாங்குனியே… ஓட்டு போட்டியா’ – வாக்காளர்கள் மீது கோபித்துக்கொண்ட வேட்பாளர்!

திருவாரூர்: மன்னார்குடி அருகே கிராம மக்கள் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடாததால் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் கிராமம் முழுவது நோட்டீஸ் ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திருவாரூரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது . இதில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு வழிகளில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வெற்றியைக் கைபற்றினாலும், சில வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி அடைந்துவிடலாம் என நம்பி இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மன்னார்குடியில் சில பதவிகள் ஏலம் விடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது.

இச்சூழலில் மன்னார்குடி அருகே கீழபனையூர் கிராமத்தில் ஏதோ ஒரு வேட்பாளர் பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்க நினைத்திருக்கையில், மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடாமல் அவரை ஏமாற்றியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் கிராமம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

Categories

Tech |