ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஒரே வாரத்தில் கொரோனா தொற்று 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஒரே வாரத்தில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா 40 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனாம் கூறியதாவது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறையால் ஏழை நாடுகள் தவித்து வருகிறது.
இந்நிலையில் பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று WHO வின் தலைவர் பணக்கார நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.