Categories
தேசிய செய்திகள்

“இப்படி சமைத்து சாப்பிட்டால் ஆபத்து இல்லை”… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு..!!

நன்கு சமைத்த கோழி மற்றும் முட்டையிலிருந்து பறவை காய்ச்சல் பரவாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரணத்தினால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நன்கு சமைத்த இறைச்சிகளை சாப்பிடுவதில் ஆபத்து இல்லை என்று அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், டில்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் புலம்பெயர்ந்து வந்த பறவைகள் இடையே பறவை காய்ச்சல் பரவி வருவதாக கண்டறியப்பட்டது.

9 மாநிலங்களில் பண்ணை கோழிகளுக்கும் இந்த நோய் பரவி இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. இதையடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முழுமையாக நன்கு சமைக்கப்படும் கோழி மற்றும் முட்ட யில் இருந்து மனிதருக்குப் பறவை காய்ச்சல் நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை.

நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சியைச் சாப்பிடலாம். ஆனால் பாதி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். வீடுகளில் வாழ்பவர்கள் சில பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பறவை காய்ச்சல் தொற்று உள்ள பகுதியில் வசிப்பவர்கள் பறவைகளை கைகளால் தொட்டு பழகுவதை தவிர்க்க வேண்டும். கோழி இறைச்சியை வெறும் கையால் தொடுவது கூடாது. கையுறைகள் மற்றும் முக கவசம் அணிந்து இறைச்சிகளை கையாள வேண்டும். மேலும் இறைச்சியை திறந்தவெளியில் வைக்கக்கூடாது.

பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் பண்ணைகளில் இருந்து கோழி மற்றும் முட்டைகளை வாங்கக்கூடாது. வீடுகளை சுத்தம் செய்யும் போதும் கையுறை அணிந்து சுத்தம் செய்ய வேண்டும். கோழியை சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் சமையலுக்கு பின்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி இறைச்சியை நேரடியாக குழாய் நீரில் காட்டி கழுவக்கூடாது. இறைச்சியில் பட்டு தெறிக்கும் நீர் துளிகள் வாயிலாக தொற்று பரவும் வாய்ப்பும் உள்ளது. என்று இந்திய உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |