தட்டைப்பயறு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
தட்டைப்பயறு – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 3 பற்கள்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தட்டைப்பயிறை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 5 மணிநேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் குக்கரை வைத்து அதில் உற வைத்த தட்டைப்பயிறை போட்டு, அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், முடி வைத்த, 4 விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து அதிலுள்ள தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
பிறகு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் தாளித்த, பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கி கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் நன்கு வதக்கியபின், நறுக்கிய இஞ்சி, பூண்டை சேர்த்து சில நிமிடம் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், அதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் தேவையான அளவு உப்பு தூவி நன்கு வதக்க கொள்ளவும்.
அடுத்து வதக்கிய தக்காளியானது நன்கு குழைய வெந்தபின், அவற்றுடன் கரம் மசாலா, வேக வைத்த தட்டைப்பயறு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், சில நிமிடம் நன்கு கொதிக்க வைத்ததும், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, இறக்கி வைத்து சூடாக பரிமாறினால், ருசியான தட்டைப்பயறு கிரேவி தயார்.