அவல் வெஜ் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பீன்ஸ், கேரட் – கால் கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – கால் கப் (நறுக்கியது)
பட்டாணி – கால் கப்
வெங்காயம் – 1
கெட்டி அவல் – 2 கப்,
தக்காளி – 2,
தேங்காய் பால் – அரை கப்,
கரம்மலாசா தூள் – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு நறுக்கிய தக்காளியை எடுத்து மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து வடிகட்டி கொள்ளவும். மேலும் அரைத்த தக்காளி சாறில், தேங்காய் பால் ஊற்றியபின், அதனுடன் அவலைப் போட்டு அரை மணி நேரம் நன்கு ஊறவிடவும்.
அடுப்பில் அகன்ற வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதங்கியதும், அதனுடன் நறுக்கிய பீன்ஸ்,கேரட், உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு சில நிமிடம் நன்கு வதக்கவும்.
மேலும் வதக்கிய உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், ஊற வைத்த அவல் கலவையை சேர்த்து சிறிது உப்பு தூவி, அதில் மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சில நிமிடம்மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறிவிடவும்.
இறுதியில் கிளறி விட்ட கலவையானத, தண்ணீர் வற்றி நன்கு உதிரியானதும், அதில் நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறினால் வெரைட்டியான ருசியில் அவல் வெஜ் புலாவ் தயார்.