Categories
தேசிய செய்திகள்

LIC-ன் அசத்தல் திட்டம்…. அனைவரும் ஓய்வூதியம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

வங்கிகள் (அ) நிதிநிறுவனங்கள் (அ) எல்ஐசி என பொதுமக்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக LIC-ல் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் முன்வருகின்றனர். ஒவ்வொரும் மாதமும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களது எதிர்கால நிதிதேவைக்காக வருமானம் ஈட்ட வேண்டும் என நினைக்கின்றனர். இதனிடையில் ஓய்வூதியம் கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு அதுகுறித்த கவலை இருக்காது. ஆனால் ஓய்வூதியம் இல்லாத தனியார் ஊழியர்களுக்கு அவை சற்று கடினமானதாக இருக்கும்.

இந்த நிலையில் அனைவருக்குமே ஓய்வூதியம் கிடைக்கும் அடிப்படையில் LIC ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. லைக் ஜீவன்சாரல் எனப்படும் இத்திட்டத்தில் பிரீமியம் செலுத்துதலிலிருந்து தொகையைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் முதலீட்டாளருக்கு இருக்கிறது. இத்திட்டத்தில் பங்களிக்க குறைந்தபட்சம் 40 -80 வயது வரை இருக்க வேண்டும். ஒரு வருடாந்திர திட்டமாகும், இவற்றில் முதலீட்டாளர் ஒரே நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்யவேண்டும். இந்த திட்டத்தை எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.licindia.in வாயிலாக ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என 2 வகைகளிலும் பெற்றுக் கொள்ள இயலும்.

LIC சரல்ஜீவன் திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக மாத ஓய்வூதியமாக ரூபாய்.12,000 பெறலாம் மற்றும் ஒருமுறை பிரீமியம் செலுத்தவேண்டும். இவற்றில் பாலிசிதாரர் மாதாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் வருடத்திற்கு ஒரு முறை என்ற விருப்பங்களை தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டத்தில் ரூபாய்.10 லட்சம் முதலீடு செய்தால் அவருக்கு வருடத்திற்கு ரூபாய்.52,500 ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் பாலிசி வாங்குபவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட விபரங்கள், முகவரிசான்று மற்றும் கேஒய்சி ஆகிய ஆவணங்களை வழங்கவேண்டும்.

Categories

Tech |