விஷால் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சமீபத்தில் இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது நடிகர் விஷால் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும், அவரின் சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.