பிரபுதேவா முதல் முறையாக ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.
தமிழ் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. ஏ.சி. முகில் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவர் நடிப்பில் தேள், பஹீரா போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
இந்நிலையில், இவர் முதல் முறையாக ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார். ஆஷிஷ் குமார் இயக்கத்தில் நாயகனாக நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். ஜர்னி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆக்ரா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.