லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலத்திலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது .அப்போது நரசிங்கபுரத்தின் வழியே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த சரக்கு ஏற்றும் தொழிலாளியான மணி என்பவர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.