தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலையாம்பட்டு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பராசக்தி நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பராசக்தி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் அவரது உறவினர்கள் காவல் துறையினருக்கு தெரிவிக்காமலேயே பராசக்தியின் உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா அளித்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பராசக்தியின் உடலைக் கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.