மகனின் பிறந்த நாள் விழாவை கொண்டாட கணவர் மறுப்பு தெரிவித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ அபூர்வா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாள் விழாவை விமர்சையாக கொண்டாட வேண்டும் என அபூர்வா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அருண்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த அபூர்வா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.