திருமணமான இரண்டரை ஆண்டுகளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரத்னகிரிகொத்து ஊரில் லட்சுமணன் என்பர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற ஒரு மகள் உள்ளார். இவரது மகள் காவியாவிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சர்ஜா புரத்தில் ரவி தறி வேலை செய்து வந்ததால் அவரது மனைவி காவியா தனது பெற்றோருடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.இவர் திடீரென தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காவியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் அவரின் தந்தை லட்சுமணன் புகார் அளித்தார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தேன்கனிக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா திருமணமான இரண்டரை ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.