இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் தெருவில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது விஷ்ணு நகர்ப்பகுதி அருகாமையில் வந்த நிலையில் எதிரே வந்த ஒரு கண்டெய்னர் லாரி இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.