லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள முத்துகாபட்டி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராமை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.