குழந்தை இல்லாததால் மனைவியை கொடுமை படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள நாராயணத்தேவன் பட்டியில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது பவித்ராவிற்கு வரதட்சணையாக கொடுத்த நகைகளை அவரது கணவர் அடகு வைத்து செலவு செய்துள்ளார்.
மேலும் பவித்ராவிற்கு குழந்தை பிறக்காததால் ராஜேஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் கொடுமை படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராஜேஷ்குமார் மற்றும் அவரது தாயார் போதுமணி ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.