Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி பார்த்தால் 78 நாட்களுக்கு 17,951 ரூபாய் போனஸ் ஆக வழங்க வேண்டும்.

இதற்கு மத்திய அமைச்சரவை இந்த வாரம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு  78 நாட்கள் போனஸ் தொகையை வழக்கத்தை விட கூடுதலாக வழங்க வேண்டும் என்று நடபாண்டில் ரயில்வே ஊழியர்கள் எதிர்பார்ப்பதால், ரயில்வே ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.‌ராகவய்யா கூடுதல் போனஸ் தொகை தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தற்போது போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக சுமார் 1832 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசிதழ் சான்றிதழ் அல்லாத 11.27 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தசரா பண்டிகைக்கு முன்பாக இந்திய பிரதமர் மோடி ஊழியர்களுக்கு போனஸ் தொகையை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |