Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில்…. நடைப்பெற்ற நிகழ்ச்சி…. நன்றி தெரிவித்த ஊராட்சி செயலாளர்….!!

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மியாவாக்கி குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.எஸ். அப்துல்கலில் மற்றும் எஸ். சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.

அதன்பின் கலெக்டர் சிவன் அருள், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஊராட்சி உதவி இயக்குனர் அருண் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து மரக்கன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |