Categories
மாநில செய்திகள்

“குண்டி வெடிப்பை கண்டுக்காமல் நயன்தாரா வழக்கில் கவனம் செலுத்துகிறது”….. திமுக அரசை கடுமையாக விமர்சித்த சி.வி. சண்முகம்….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சி.வி. சண்முகம், திமுக ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து பலமுறை கூறியுள்ளோம், செயல்படாத அரசு என்றும் திறமை ஏற்ற அரசு என்றும். சட்ட ஒழுங்கு சுத்தமாக சீர்கெட்டு உள்ளது எனவும் பலமுறை கூறியிருக்கும்.

அதற்கு எடுத்துக்காட்டாக கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகம் முதல்வர் மௌனம் காத்து வருகிறார். அவர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேசுவதற்கு தயங்குகிறார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கி வருகிறது. இதற்கு கோவை கொண்டு வெடிப்பு என்பது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். ஆனால் அதே பற்றி சிந்திக்காமல் மக்களுடைய அச்சத்தை போக்காமல் இந்த அரசு முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறி வருகிறது. இதை வைத்து அரசியல் செய்து வருகிறது. மேலும் மக்களின் அச்சத்தை போக்குவத்தை தவிர்த்து நயன்தாரா சட்டத்திற்கு உட்பட்டு குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் திமுக அரசை குற்றம் சாட்டை உள்ளார்.

Categories

Tech |