Categories
மாவட்ட செய்திகள்

குளிக்கப்பதற்காக சென்ற மாணவன்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. போலிஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வடக்கு சீனிவாசபுரம் தெருவில் கோவிந்தராஜன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் சஞ்சீவி(13) என்ற மகனும் உள்ளனர். சஞ்சீவி ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக தனது மகன் மற்றும் மகளை லால்குடியில் வசிக்கும் தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு கோவிந்தராஜன் கோயம்புத்தூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு தீபாவளி சீர் கொடுக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று நண்பர்கள் இரண்டு பேருடன் மோட்டார் செட்டுக்கு குளிக்க போவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர்கள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். என்னை தொடர்ந்து சஞ்சீவ ஆற்றுக்குள் முதலில் இறங்கி உள்ளார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியதை கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

மேலும் சஞ்சீவி வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த லால்குடி போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இருந்த சஞ்சீவி உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |