குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு 9 வயதில் சமீரா என்ற பெண் குழந்தையும் 7 வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று சமீராவும் யோகேஷும் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். குளத்தில் நீர் அதிகமாக இருந்ததால் இரு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும் அவர்களால் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.