குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த துர்காதேவிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அருண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் அருண்குமார் தினமும் மது அருந்திவிட்டு மனைவி துர்கா தேவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக துர்காதேவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அருண்குமார் தொடர்ந்து துர்கா தேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்ப பிரச்சினையால் மிகவும் மனமுடைந்த துர்காதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த துர்காதேவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இறந்த துர்காதேவியின் தாயார் கற்பகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர் .