நாகை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள இருக்கை ஊராட்சியில் தெற்கு தெருவை சேர்ந்த செய்யது முபாரக் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார் இவருக்கு ஹாஜிராம்மா என்ற மனைவியும் ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகனான சதாம் உசேன் கத்தார் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் இந்நிலையில் தந்தை தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று செய்யது முபாரக் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் .இதனால் மகனுக்கும் – தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மகன் கத்தியால் தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் காயமடைந்த செய்யது முபாரக் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார் இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கீழ்வேளூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செய்யது முபாரக்கை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகன் சதாம் உசேனை கைது செய்துள்ளனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.