Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்…. ஏதோ ஆபத்து இருக்கிறது…. எச்சரிக்கை விடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்….!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில முன்னாள் செயலரும் விடுதலைப் போராட்ட வீரருமான மறைந்த மாணிக்கத்தின் நூற்றாண்டு நினைவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இந்நிகழ்ச்சியின் நடைபெற்றது. அதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளரை சந்தித்து பேசியனார்.

அப்போது கோவை கார் விபத்து சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களைகைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு இந்தி திணிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், இந்தி திணிப்பு கூடாது. வேண்டுமென்றே இந்தி திணிக்கிறார்கள். இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |