பவானிசாகர் அணை பகுதியில் நீர் வரத்து குறைந்து இருக்கின்றது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணை தண்ணீரின் மூலமாக சுமார் 2 1/2 லட்சம் ஏக்கர் நிலப்பகுதிகள் பாசனவசதி பெறுருகிறது. இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததனால் கடந்த மாதம் 30-ஆம் தேதி 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி இருக்கின்றது. இதனையடுத்து அணையின் நலன் கருதி செப்டம்பர் மாதம் இறுதிவரை அதிகப்பட்சம் 102 அடிக்குமேல் தேக்க முடியாததால் பவானியாற்றில் வினாடிக்கு 2,800 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் இந்த அணைக்கு நீர்வரத்து குறைந்ததனால் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், உபரி நீராக வினாடிக்கு 2 ஆயிரத்து 280 கன அடி என மொத்தம் வினாடிக்கு 2 ஆயிரத்து 780 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக 102 அடியாக இருந்த நிலையில் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,014 கன அடியாக குறைந்தது.