கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்குமே கொரோனா கால பயணத்தில் 4-ம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக இந்த இரு நாடுகளும் கொரோனா பரவலில் மிகவும் அபாய நிலையில் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அபாய பிரிவில் ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், கிரீஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து செக் குடியரசு, ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இருக்கிறது.
இந்த நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், கொரோனாவை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே ஜெர்மனியில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி அண்டை நாடான ஆஸ்திரியாவில் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டிலுள்ள பொதுமுடக்கமானது மீண்டும் கொண்டு வரப்படலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.