கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமை தாங்கினார். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கோவேக்சின் 32, கோவிஷீல்டு 92 என மொத்தம் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் 124 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தங்கியிருந்து பின் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். அப்போது நளினி பாரதி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிஸ்கட், பால் கொடுத்துள்ளார். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர், வீரம்மாள் முத்தையா, கிராம நிர்வாக அலுவலர் உலகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.