Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

தேனியில் ஒரே நாளன்று 502 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளன்று 502 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றால் பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 26,474 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |