அகவிலைப்படி உயர்வு குடும்பநல நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல்ல அமைப்பு சார்பில் தபால் கார்ட் போராட்டம் நடைபெற்றது.
58 மாத அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர் குடும்ப நலநிதி 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற என்ற அமைப்பின் சார்பில், பெரம்பலூர் தபால் கார்ட் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் முசிறியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்ற அமைப்பின் சார்பில், முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.