கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே கிறிஸ் லின் 0 ரன்னிலும் அதை தொடர்ந்து சுனில் நரேன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த நிதிஸ் ராணா 0, ராபின் உத்தப்பா 11, தினேஷ் கார்த்திக் 19, சுப்மன் கில் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த ஆண்ட்ரே ரஸெலும் பியூஸ் சாவ்லாவும் ஜோடி சேர்ந்தனர். அதன் பின் சாவ்லா 9, குல்தீப் யாதவ் 0, பிரசித் கிருஸ்ணா 0, ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஆண்ட்ரே ரஸெல் சிறப்பாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. ஆண்ட்ரே ரஸெல் 50* (44) ரன்களிலும், ஹாரி கர்ணி 1* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இதையடுத்து சென்னை அணி களமிறங்கி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.