Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்தாங்க…. மனைவி செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலசம்பாடி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கட்ராமனுக்கு மாம்பாடி பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த கவிதா கணவரை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கட்ராமன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.

இந்தநிலையில் வெங்கட்ராமன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கவிதா தனது கணவர் மற்றும் அவருடைய கள்ளக்காதலியிடம் சென்று என்னையும், குழந்தையையும் தவிக்க விட்டு சென்றது நியாயமா என தட்டி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து கவிதாவை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக கவிதா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கட்ராமன் மற்றும் அவருடைய கள்ளக்காதலியை கைது செய்தனர்.

Categories

Tech |