Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தண்ணீர் எடுக்க… சகோதரனுடன் கிணற்றுக்கு சென்ற சிறுமி… பின்னர் நடந்த கொடூரம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நாகலாம்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகள் பிரேமலதா. இவர்  அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரேமலதா தனது தம்பியுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது பிரேமலதா கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது சிறுமி கிணற்றுக்குள் எந்த அசைவும் இல்லாத நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலைய  வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று   கிணற்றுக்குள் விழுந்த பிரேமலதாவை சடலமாக மீட்டனர்.  இது  குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பிரேமலதாவின்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |