Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விளையாடிக்கொண்டிருந்த அண்ணன்-தம்பி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர் வங்கி ஊழியராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷால், வினித் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பும், வினித் 2-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். தற்போது விஷால் மற்றும் வினீத் இருவரும் திண்டிவனம் ரோசனையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளர். இந்நிலையில் இருவரும் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த கிணற்றில் இருவரும் தவறி விழுந்தனர்.

இதில் தண்ணீரில் மூழ்கி வினீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து தண்ணீரில் மூழ்கிய விஷாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று விஷாலை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் விஷாலை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ரோசனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |