வடமாநில தொழிலாளியை காரில் கடத்திச் சென்று அவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ரங்கராஜபுரம் பகுதியில் மகேந்திர குமார் என்ற வடமாநில கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் கடந்த 9ஆம் தேதி இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் மகேந்திர குமாரை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் மகேந்திரகுமாரின் செல்போனை பறித்து விட்டு அவரை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு அந்த மர்ம நபர்கள் தப்பித்து விட்டனர்.
இதுகுறித்து கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் மகேந்திர குமாரை கடத்தி சென்ற சந்திரசேகர், சௌந்திரராஜன் மற்றும் மகேஷ் போன்ற மூன்று வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.