சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அடுத்த ஆண்டு மீண்டும் அதிபராக பதவியேற்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுடன் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு நிறைவு பெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் சில நூறு ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது கூடுதல் அதிகாரங்கள் அதிபர் ஜி ஜின்பிங்-க்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் ஜி ஜின்பிங்-ஐ 3-ஆவது முறையாக அதிபராக்க 2022-ஆம் ஆண்டில் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டை கூட்டி தொடர் ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.